குறித்த விமானத்தின் விமானிகள் மற்றும் அதில் பயணித்த 142 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சிட்டகாங் விமான நிலைய அதிகாரி சாஹில் மிராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு மூலம் விமானத்தை வெடிக்க வைக்கப்போவதாகவும் தன்னிடம் பங்களாதேஷ் பிரதமர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறித்த தாக்குதல்தாரி தெரிவித்திருந்ததாகவும் இந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
8 நிமிடங்களுக்கு மேலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறித்த தாக்குதல்தாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன், தாக்குதலிற்குப் பயன்படுத்திய பிஸ்டல் ரக கைத்துப்பாக்கியினையும் பங்களாதேஷ் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பணயக் கைதிகளாக பயணிகள்!
பங்களாகதேஷில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பங்களாகதேஷ் சிட்டகாங்கில் இருந்து டாக்கா வழியாக டுபாய் செல்லவிருந்த விமானத்திற்கே குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவ்விமானத்தின் விமானிகள் மற்றும் பயணிகள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விமானக்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்களாகதேஷ் பிரதமர் ஹசினாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தை அடுத்து சிட்டகாங்க் விமான நிலையம் மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆயுதம் தாங்கிய தனிநபர் ஒருவரே குறித்த விமானத்தைக் கடத்த முயற்சி செய்துள்ளதாக என பங்களாகதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.