சிரியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள சலாமியே பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்ணிவெடியில் சிக்கியுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் பல பகுதிகள் காணப்பட்ட நிலையில், அப்பகுதிகளை சிரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அப்பகுதியூயாக மக்கள் பயணத்தை கொண்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற பகுதிகளில், அவர்கள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி பொதுமக்கள் அடுத்தடுத்து உயிரிழப்புக்களைச் சந்திக்கின்றனர்.
இதே பகுதியில் இருவாரங்களுக்கு முன்னரும் கண்ணிவெடியில் சிக்கி 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.