கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நீண்ட இழுபறிக்கு மத்தியில் அரசியல் குழப்பநிலை தீர்ந்துவிட்டதான நிலைப்பாடு காணப்படுகின்றது. ஆனால் இது நிரந்தரமில்லை.
புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வாய்ப்பு கிடைத்தமையானது எமக்குக் கிடைத்த வெற்றி என எடுத்துக் கொள்ளக்கூடாது. இன்று கிடைத்த ஆட்சி அதிகாரத்தின் மூலம் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்.
எனினும் எவ்வாறான பிரச்சினைகளுக்கும் நாம் முகங்கொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம். எனவே பிரதமரான ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.