LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 24, 2018

வாழைச்சேனையில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து பால்சோறு வழங்கல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்றமைக்கு திங்கட்கிழமை வாழைச்சேனையில் மகிழ்விக்கும் முகமாக பாற்சோறு மற்றும் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் திருமதி.ப.லெட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தையூப் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய அருகாமையில் பாற்சோறு மற்றும் குளிர்பானம் என்பன வீதியால் வருகை தந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறையில் உள்ளவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது தடவையாக பிரதமாக பதவி ஏற்றமைக்கும், கல்குடாத் தொகுதிக்கு இராஜாங்க அமைச்சர் கிடைத்தமைக்குமான சந்தோசத்தில் பாற்சோறு மற்றும் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டதாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் திருமதி.ப.லெட்சுமி தெரிவித்தார்.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7