LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 16, 2018

பிரான்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது!

பிரான்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பிரான்ஸில் கடந்த ஐந்துவார காலமாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நேற்றும்(சனிக்கிழமை)  தலைநகர் பரிஸில் “எலோ வெஸ்ட்“ ஆர்ப்பாட்டக் குழுவினர் ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதன் போது அரசியலமைப்பை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தியும், மக்களாட்சியை உறுதிப்படுத்துமாறும் ஆர்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பரிஸ் பொலிஸார் கட்டுப்படுத்திய நிலையில் ஆர்பாட்டகாரர்கள் அதற்கு எதிர்பு தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனை கடுப்படுத்த பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்தில் சுமார் முப்பத்து மூவாயிரத்து 500 பேர் வரையில் பங்கேற்றதாகவும் அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கனவே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவற்றிற்கு உடன்படாத ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ச்சியாக போராடுவோம் என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டதோடு, வன்முறைகளை தடுக்கும் வகையில் அதியுச்ச பாதுகாப்பை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7