இலங்கையில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை
செஞ்சிலுவை சங்கம் பல வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது
.
இலங்கை செஞ்சிலுவை சங்கம் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார
திணைக்களத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம்
அதிகமாக உள்ள இடங்களாக இனம் காணப்பட்ட நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்
தெரிவு செய்யப்பட்டு அப்பகுதிகளில் நுளம்பு
பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இதற்கு அமைய இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையுடன் மட்டக்களப்பு மாநகர சுகாதார பிரிவுடன் இணைந்து மட்டக்களப்பு நாவக்கேணி
சுகாதார பிரிவில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான நுளம்பு வலைகள் மற்றும்
கிணறுகளுக்கான வலை மூடிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு நாவக்கேணி கண்ணகி
வித்தியாலயத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாநகர சுகாதார பிரிவு பொதுசுகாதார பரிசோதகர் கே
.ஜெய்சங்கர் ஒழுங்கமைப்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் த. வசந்தராஜா தலைமையில்
நடைபெற்ற பயனாளிகளுக்கான நுளம்பு வலைகள் மற்றும் கிணறுகளுக்கான வலை மூடிகள்
வழங்கும் நிகழ்வு அதிதியாக
மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ,கலந்துகொண்டு
பயனாளிகளுக்கான நுளம்பு வலைகள் மற்றும் கிணறுகளுக்கான வலை மூடிகளை வழங்கி வைத்தார்
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இணைப்பாளர் எஸ் .கஜேந்திரன் மட்டக்களப்பு கிளை உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு
மாநகர நாவக்கேணி சுகாதார பிரிவு பயனாளிகள்
கலந்துகொண்டனர்