பல்வேறு நாடுகளும் பல கோடிகள் செலவு செய்து இந்த ஏலியன்ஸ் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ரஷ்ய கடற்படையின் இரகசிய அமைப்பின் இயக்குனர் அட்மிரல் என்பவர் ஏலியன்ஸ் பற்றி கூறியதாவது:
’பூமிக்குள் பலவித மர்மங்கள் இருக்கின்றன. அதில் மனித அறிவிப்புக்கு அப்பாற்பட்ட பல அதிசயங்கள் உள்ளன. அதனால் விண்வெளியில் ஆராய்ச்சி செய்யாமல் பூமிக்கு அடியில் ஆராய்வது நலம்’ என கூறியுள்ளார்.
ரஷ்யாவில் அண்மையில் பாறைக்கு அடியில் மிக வித்தியாசமான ஒரு பொருளைக்கண்டு பிடித்துள்ளனர். பனிப்பாறைகளுக்கு கீழே கிடைத்த இப்பொருள் ஆதிகால எழுத்துருக்களை கொண்டதாக உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் இந்த பொருள் ஏலியன்ஸ் பயன்படுத்தும் விண்கலமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
தற்போது பெரும்பாலானவர்கள் ஏலியன்ஸ் இருப்பதை உறுதி செய்துவிட்டனர். நாசாவும் இதை நம்புகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.