கருணாநிதி மீது என்றுமே மரியாதை உண்டு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதாகச் செல்வதால் என்னால் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை. எந்த அரசாக இருந்தாலும் மக்களை மதிக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இப்போது செல்கிறேன். கருணாநிதியின் மீது எப்போதுமே என்றைக்குமே எனக்கு மரியாதை உண்டு. ஏற்கெனவே நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டதால் செல்லவேண்டிய நிலை. அதனால்தான் சிலை திறப்பு விழாவுக்கு வருவேன் என்று சொல்லவே இல்லை.
ஸ்டெர்லைட் விஷயத்தில் எந்த அரசாக இருந்தாலும் மக்களை மதித்து நடக்கவேண்டும்.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஸ்டெர்லைட் பற்றிய கருத்தும் முடிவும் ஏற்புடையதாக இல்லை. இந்தத் தீர்ப்பில் உடன்பாடில்லை.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.