(பாண்டி)
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஐயப்ப விரத பூசைகள் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது விசேட யாகம்இ அபிசேக பூஜைகள் இடம்பெற்று ஐயப்பர் பஜனை சிறப்பான முறையில் நடைபெற்றதுடன் மண்டல பூசைகள் என்பன சிறப்பான முறையில் நடைபெற்றது.
இப்பூசைகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும்இ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இப்பூசையில் கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவயோகச் செல்வன் தா.சாம்பசிவம் சிவாச்சாரியார்இ ஏறாவூர் சர்வமத ஐயப்ப யாத்திரை குழுவின் ஐயப்ப சுவாமிகள்இ மட்டக்களப்பு மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரை குழுவின் ஐயப்ப சுவாமிகள் மற்றும் வாழைச்சேனை உட்பட பல பகுதிகளிலும் இந்து பல ஐயப்ப சுவாமிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரை குழுவினால் பேரவை தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர்.
ஐயப்பர் விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் மண்டல பூஜையினை தொடர்ந்து இந்தியாவில் கேரளாவிலுள்ள ஐயப்பர் ஆலயத்திற்கான பாதயாத்திரையினை ஆரம்பிப்பது குறிப்பிடத்தக்கது.