
சீனாவின் பிரதான உளவுத்துறை சார்பில் செயற்பட்டுவரும் இணைய திருடர்களால் 12 நாடுகள் கனடா உள்ளடங்களாக பன்னிரெண்டு நாடுகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஸு ஹுவா மற்றும் ஸங் ஷிலோங் ஆகிய இருவரும் உலக நாடுகளின் முக்கிய தகவல்களை சேகரிப்பதற்காக சீனாவின் பிரதான உளவுத்துறை சார்பாக செயற்பட்டு வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) குற்றம் சாட்டினர்.
இதேவேளை, கடந்த 2006 முதல் 2018ஆம் ஆண்டுவரை கனடா உள்ளிட்ட 12 நாடுகளின் 45இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கணனிகன் ஊடுறுவப்பட்டுள்ளதாக தெரிவித்து நியூயோர்க் நகரின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
