என்னை அப்பா, அம்மா என எழுதிக் காண்பித்த அதே வெண்கட்டியும் கரும்பலகையுமே எனது பிள்ளைகளையும் தொடர்கின்றன.
எனது பாடல்களை இசைத்து ரசித்த ஆலமரமும்
புதிர்விட்டு மகிழ்ந்த புளிய மரமும்
பாடம் கேட்டு பிரம்பின் சொல்லில் அடங்கிய மாவையும்
எனது பிள்ளைகள் காணவில்லை.
குளத்தில் குளித்து
சாரத்தை முட்டை கட்டி
நீந்தி
சுழியோடி
வேளாண்மையில் கைதடவிச் சளைத்து
வகுப்பறைக்குள் நுழைந்து குளிர்ந்திடும்
காற்றை எனது பிள்ளைகள் காணவில்லை.
எனது குழந்தைகள் என்னையும் அல்லவா கணாமல் போய்விட்டார்கள்
நிலவைக் காட்டி பாட்டொன்றைப் பாடுவதற்குள்
பூனையைக் காட்டி ஒரு பிடி சோறு ஊட்டுவதற்குள்
இருளைக் காட்டி
மழையைக் காட்டி
மலரைக் காட்டுவதற்குள்.