இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மொஸ்கோவுக்கு வடகிழக்காக சுமார் 1500 (930 மைல்கள்) தொலைவில் உள்ள சொலிகாமஸ்க் சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்து மற்றும் அதிகபுகை காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த சுரங்கத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமான பணியாளர்கள் அதில் சிக்குண்டதுன், அதன் ஒருபகுதியின் தீ இன்னமும் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 360 மீட்டர் ஆழத்தில் இருந்து உயிரிழந்த பணியாளர்களை மீட்கும் பணிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.