LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 22, 2018

9 வீடுகளை உடைத்து 30 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிட் ஒருவர் கைது



மட்டக்களப்பு தலைநகரில் 9 வீடுகளை உடைத்து கொள்ளையிட் ஒருவர் கைது 30 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் மின் உபகரணங்கள் மீட்பு 


நீண்ட காலமாக மட்டக்களப்பு தலைநகர் பிரதேசத்தில் பல வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்டு வந்த ஒருவரை நேற்று வியாழக்கிழமை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 30 பவுண் தங்க ஆபரணங்கள் தொலைக்காட்சிகள் சமயல் வாயு சிலின்டர் உட்பட பல பொருட்களை மீட்டுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுகப்பதிகாரி ஏ.எம்.என். பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பரிரிவின் கீழ் உள்ள பல வீடுகள் கொள்ளை தொடர்பாக நீண்ட காலமாக தேடப்பட்டுவந்த குறித்த நபர் தலைமறைவாகி வந்துள்ள நிலையில் மட்டு  உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால . தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்..டீ. கீத்கா வத்தரவின் ஆலோசணையில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுகப்பதிகாரி ஏ.எம்.என். பண்டார தலைமையிலான சப் இன்பெக்டர் கெட்டியாராச்சி ,உட்பட 10 பேர் கொண்;  பொலிஸ் குழுவினர்  மண்டூர் பிரதேசத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை கைது செய்தனர்.

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் 33 வயதுடையவர் எனவும் இவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் 8 வீடுகள் மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு வீடு உட்பட 9 வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுள்ளதாகவும் இதில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மத்தியமுகாம், சம்மாந்துறை, கல்முனை, களுவாஞ்சிக்குடி கிரான், போன்ற பிரதேசங்களில் உள் நகை அடைவ பிடிக்கும் கடைகளில் ஈடுவைத்துள்ளார் .







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7