சாஸ்காட்டூன் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்,மோசமான வானிலை காரணமாக, நகர்ந்து கொண்டிருந்த விமானம் கட்டுப்பாட்டினை இழந்து ஓடுபாதையை விட்டு சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.
குறித்த வானூர்தியில் 74 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்த நிலையில், அவர்கள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், விமான நிலைய தலைமை நிறைவேற்று இயக்குனர் ஸ்டீஃபன் மேபெர்றி தெரிவித்துள்ளார்.
எனினும் விபத்தை அடுத்து அவர்கள் அனைவரும் அவசர சறுக்குப் பாதை வழியாக பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், பேரூந்துகள் மூலமாக விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக குறித்த அந்த ஓடுபாதை மாத்திரம் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த விமான நிலைய நிர்வாகம், எனினும் விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.