LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 17, 2018

நித்தம் சிவத்துளிகள் - 48



——— நமசிவாய வாழ்க ———

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசேன்
மெய்யொன்றை அன்றி பொய்யிங்கு பேசேன்
மண்தன்னை தோண்ட கல்லங்கு வந்து
சிவனாய் நின்ற காட்சியை கண்டேன்

விண்தன்னில் கூட சிவம் தன்னைக்கண்டு
விண்மீன்கள் யாவும் நல்லாசி நல்க
எந்தன்னில் நானே சிவம்காணும் விந்தை
மண்தன்னில் போதும் நான் வாழும் வரைக்கும்

கண்கொண்டு கண்ட சிவமென்னில் நின்று
அசைந்தாடும் இசையில் ஆனந்தம் கொண்டேன்
இறைவந்த பின்னே இடரென்ன செய்யும்
அகிலத்தில் இனிமேல் விதியென்ன செய்யும்

கிரகங்கள் இனியென்னை தீண்டவும் மாட்டா
பூதங்கள் ஐந்தேதும் தீவினைகள் செய்யா
பிரபஞ்சம் எங்கும் நிறைவாகி உள்ள
சிவந்தன்னில் உள்ளே  துளியாய் நின்றால்

துன்பங்கள் எல்லாம் சிவனாலே எரியும்
துயரங்கள் எல்லாம் சாம்பலும் ஆகும்
துணிவோடு நாளை எதிர்கொள்ள நானும்
பகை ஐந்துமிங்கே புகையாக மறையும்

ஐம்புலனடக்கின் ஆண்டவனின் துணையால்
கோவில் என்றும் குளமென்றும் சிவம் தேடவேண்டாம்
உன்னுளே என்னுள்ளே உள்ளொன்றை காண
மெல்லனவே நம்முள்ளே சிவம்வந்து சேர்வார்

சங்கரன் ஜெய சங்கரன்❤️
  சிவனடியான்🙏





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7