இரவின் வெளி நிறைய இசை
இரவும் இசையும்
தூங்கப் போதுமானதாக இருக்கின்றன
போதியளவு தூங்காத
இரவும் இசையும் இருக்கின்றன
இரவின் பேரலையைப் போல
இசையின் பேரலைகளும்
துயர் கணங்களை நிசப்தப்படுத்துகின்றன
இந்த உலகம்
இசையின் பிரதி
இந்த இரவின் வெளி நிறைய இசை இருக்கின்றது
இசை ஆன்மாவில் பயணித்து
என்னை ஆசீர்வதிக்கிறது
நட்சத்திரங்களை ஒரு சிறுமி பொறுக்குவதைப் போல
இசையை இரவு முழுவதுமாய் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்
ஏ.நஸ்புள்ளாஹ்