தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தோழமை தினமும் தோழர் க . பத்மநாபாவின் 67 வது பிறந்த தினமும் திருகோணமலை குளோக்கோட்டன் மண்டபத்தில் திங்கட்கிழமை(19) தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளரும் திருகோணமலை நகரசபையின் உருப்பினருமான சி.சிவகுமார் (சத்தியன்) தலைமையில் இடம்பெற்றது.
ஆரம்பநிகழ்வாக கட்சி அலுவலகத்தில் உள்ள பத்மநாபாவின் உருவச்சிலைக்கு கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் வடகிழக்கு மாகாண முதல்அமைச்சருமான அ.வரதராஜபெருமாள் மலர்மாலை அணிவிப்பதையும், தோழமை தினத்தின் சிறப்பு நிகழ்வாக மக்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம் பெறுவதையும் படங்களில் காணலாம்.
(அச்சுதன் )