LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 21, 2018

சந்திரகாந்தனின் விடுதலையை எதிர்பார்த்திருந்த நிலையில் கட்சி ஆதவாளர்கள்


சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று விடுதலை செய்யப்படுவார் என்ற நிலையில் கட்சி ஆதவாளர்கள் கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்வரும்  ஜனவரி மாதத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும்  2019  ஜனவரி மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று  எடுத்துக்கொள்ளப்பட்டது

பலத்த பொலிஸ் பாதுகாப்பு மத்தியில் இன்று மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம் ஐ இசதீன் முன்னிலையில் எடுத்துக்கொண்ட வழக்கு விசாரணைகள் மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டள்ளது.
சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று விடுதலை செய்யப்படுவார் என்ற நிலையில் கட்சி ஆதவாளர்கள் கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு  மேல்நீதிமன்ற வளாகத்திற்கு  முன்னால் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்வரும்  ஜனவரி மாதத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




       



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7