மட்டக்களப்பு விமான நிலைய ஊழியர்கள்
தமது அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற கோரி ஆர்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்
மட்டக்களப்பு விமானநிலையத்தில் கடந்த ஒருவருட காலமாக தனியார் நிறுவனத்தின்
ஊடாக) விமானநிலையத்தில் ஊழியர்களாக கடையாற்றி வந்த ஊழியர்களின் அடிப்படை
உரிமைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில்
இன்று கடமையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக
தெரிவிக்கின்றனர்
கடந்த ஒருவருடமாக விமானநிலையத்தில் ஊழியர்களாக தொழில் புரிந்து வந்த
நிலையில் தமது அடிப்படை உரிமைகள் தொடர்பாக
கோரிக்கைகளை தமது தொழில் நிறுவனத்திற்கு அறிவிக்குமாறு நிறுவன மேற்பார்வை
உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டு இதுவரை எதுவித நடவடிக்கைகள் மேற்கொள்ளாது நிலையில்
இன்று குறித்த மேற்பார்வையாளருடன் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக தம்மை
விமானநிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர் .
குறித்த மேற்பார்வையாளரின் செயல்பாட்டை கண்டித்தும் , தமக்கான
நியாயமான தீர்வினையும் பெற்றுத்தருமாறு கோரி மட்டக்களப்பு விமான நிலைய ஊழியர்கள்
விமானநிலையத்திற்கு முன்னாள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்