சபாநாயகரின் அறிவிப்புக்கு அமைய உத்தியோகபூர்வமாக அமைச்சரவை கலைக்கப்பட்டதாக அர்த்தப்படும்.
இதன் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டவராக கருதப்படுவார்.
பிரதமர் நீக்கப்பட்டதன் பின்னர் அமைச்சின் செயலாளர்களும் இரத்து செய்யப்படுவார்கள். அதற்கமைய அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு அரசியலமைப்பை மீறியதென குற்றம் சாட்டப்பட்டு பிரேரணை ஒன்று இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் 7 உறுப்பினர்களின் கைச்சாத்துடன் இந்த பிரேரணை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 148வது அரசியலமைப்பிற்கு அமைய பொது மக்களின் பணத்தை பயன்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மாத்திரமே உள்ளதாக அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரினால் அறிவிக்கப்பட்ட தகவலை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முறையற்ற வகையில் நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஏ.நஸ்புள்ளாஹ்)