மட்டக்களப்பு மாவட்ட பெரன்டினா குழுமத்தின் ஒரு நிறுவனமான
பெரன்டினா தொழில் வள நிறுவனம் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் திறன்
அபிவிருத்தியையும் தொழில் வாய்ப்பினையும்
ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
.
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை
தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளின்
திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்பு தொடர்பாக செயல்திட்டங்களை
நடைமுற்றைப்படுத்தும் அரச அலுவலக உத்தியோகத்த்ரளுக்கான பயிற்சி செயலமர்வு இன்று மட்டக்களப்பு
சத்துருக்கொண்டான சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு பெரன்டினா தொழில் வள நிறுவன மாவட்ட பணிப்பாளர் எஸ் .தினேஷ் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் வளவாளராக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில்
வழிகாட்டி உத்தியோகத்தர் , எ .ஜெகநாதன்
மற்றும் பயிற்சி செயலமர்வு பட்டிப்பளை
பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் ,பொருதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் , மனிதவள மேம்பாட்டு
உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்