LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 20, 2018

நமக்கான அழைப்பு -21

இறைவன் நம்மை அழைக்கின்றார். நாம் வாழவேண்டும் என்று அழைக்கின்றார். சமுதாயமாக எம்மை அமைத்து கூட்டாக வாழ வேண்டும் என்று அவர்; விழைகின்றார்.

தன்னை அன்பு செய்து வாழ எம்மை அழைக்கும் அவர், நம்மைப் பேல பிறரை அன்பு செய்து வாழவேண்டும் என்றும் அழைக்கின்றார். அவரது அழைப்பு என்பது நம்மை நாம் அன்பு செய்து வாழ வேண்டும் என்று அழைக்கின்றது. மத்தேயு நற்செய்தி 7: 12 இதை நமக்குக் கூறுகிறது. அவரது படைப்பான நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே அன்பு செய்யவும், இறைவனின் சாயலாக உருவாக்கப்பட்டு எமக்கான ஆளுமையை உருவாக்கித் தந்து மனிதராக நடமாட விட்ட அவர், தம் படைப்பு சீரழிந்து போவதை விரும்புவதில்லை. தன்னைத் தானே நன்கு கவனித்து வாழவேண்டும் என்பது அவரின் விருப்பம் என்பதில் தவறேதும் இருக்க முடியாது.

ஆனாலும் இதை விட முக்கியமானதொரு அம்சமும் இருக்கிறது. எவ்வாறு நாம் நம்மை அன்பு செய்து வாழவேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ அப்படியே நம் அயலாரையும் நாம் அன்பு செய்து வாழவேண்டும் என்றும் அவர் விரும்புகின்றார் – அதற்கான அழைப்பையும் அவர் மத். 22: 39 இல் எமக்கு விடுக்கின்றார். நாம் எப்படியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதுபோல மற்றவரும் நல்ல நிலையில் வாழ்வதை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது சித்தமாக இருக்கின்றது.

எனவே வாழ்க்கை என்ற நாணயத்தைப் பொறுத்தவரையில் அவர் நமக்கு விடுக்கும் அழைப்பில் அடுத்தவர்க்காக வாழ்வதை அந்த நாணயத்தின் அடுத்த பக்கம் போல் அமைவதை அவர் வலியுறுத்துகின்றார்.

நல்ல சமாரித்தன் உவமையில் அடிபட்டுக் காயங்களுடன் குற்றுயிராக இருக்கின்ற ஒருத்தனை கண்டும் காணாதது போல பலரும் விட்டுச் செல்லும் நிலையில் - பெரும் அந்தஸ்தோடு வாழ்ந்தவர்கள், மற்றவர்களுக்குச் சேவையாற்ற வேண்டியவர்கள் என்றெல்லாம் பலரும் பாதிக்கப்பட்டவனைப் புறக்கணித்துச் செல்லும்போது, முற்றிலும் சம்பந்தமில்லாதவன், ஒரு வகையில் சொல்லப் போனால் விலக்கப்பட்ட இனத்தவன் ஒருத்தன் அக்கறையோடு எந்த வித பலனையும் எதிர்பாராதவனாக, மனிதம் வாழப் பண்ணும் ஒருவனாக, மனித நேயத்தையே மனதிற் கொண்டவனாகச் செயற்பட்டு காயப்பட்டிருக்கும் தன் அயலவனை ஆதரித்து, தன் பணிகளையெல்லாம் ஒதுக்கி விட்டு, தான் அந்த நிலைக்குட்பட்டிருந்தால் மற்றவர்கள் எந்தளவு தனக்கு ஆதரவு காட்ட வேண்டும் என்று நினைப்பானோ, அந்தளவுக்கும் மேலாக அவனுக்காக முழுச் செலவையும் பொறுப்பேற்றுக் கொண்டதை இயேசு மிகவும் உயர்வாகப் போற்றுவதை நாம் அவதனிக்கின்றோம்.

அடுத்தவருக்காக வாழ எம்மை அழைக்கும் இயேசு தம் வாழ்வையும் அதுபோலவே அமைத்துக் கொள்கிறார் – தமது வாழ்வால் தம் வார்த்தைகளுக்கு உயிரூட்டம் தருகிறார்.

பொதுவாக செப்டம்பர் மாதம் பற்றி பெரிதாக நாம் அலட்டின் கொள்வதில்லை. பிறருக்காக வாழ்ந்த இரு புனிதர்களின் நினைவை மீட்டும் மாதமாக செப்டெம்பர மாதம் அமைகின்றது. அவர்களுள் ஒருத்தர் மரியாள் அடுத்தவர் தூய வின்சன்ட் டி போல்.

மரியன்னை முற்றிலும் தன் வாழ்வை மற்றவர்க்காக ஒப்படைத்துக் கொண்டவள். கடவுளின் சித்தமே தன் சித்தமாக ஏற்றுக் கொண்டவள் அவள். மனுக்குல மீட்பில் தன்னை முழுமையாக விடடுக் கொடுத்து, கடைசி வரை சோகங்களைத் தனதாக்கிக் கொண்டு இலாபங்களை மனுக்குலத்திற்கு வழங்கியவளல்லவா அவள்? தானே ஒரு கருவைச் சுமந்த நிலையில் கூட, தன் கருவையோ, தன் உடல் பாதிப்பையோ கொஞ்சமும் மனதிற் கொள்ளாதவளாக, சீமாட்டி எலிசபெத்துக்கு ஆறுதலாக இருக்கவும், பணிவிடைகள் புரியவும் காடு மேடேறி விரைந்தவளல்லவா அவள்? அவளது பிறருக்காக வாழும் பண்பு அவளை மானிடத்தின் அன்னையாகவல்லவா உயர்த்தியிருக்கிறது?

தூய வின்சன்ட் டி போல் தன்னோடு சிறைப்பட்டிருந்தவனுக்காகத் தண்டு வலித்து, இறக்கும் வரையில் கூட மாறாத புண்ணை காலில் கொண்டிருந்தவர். வறுமையின் நிறத்தைத் தெரிந்திருந்திருந்த அவர் அதன் சாயம் மற்றவர்களையும் தொட்டுவிடக் கூடாதென்பதில் ஆர்வத்தோடு தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். துன்புறும் மக்களில் இறைவனின் சாயலைக் கண்டு அவர்களுக்காகத் தம் வாழ்வை சமர்ப்பணம் செய்தவர். கடவுளின் இராச்சியத்துக்கு உரித்தானவர்களான குழந்தைகளை கொடியவர் கரங்களின்றும், வறுமையின் பிடியினின்றும் மீட்டுக் காப்பதில் கொடிய மிருகங்களுடன் கூட போட்டி போடத் தயங்காத பெரு மனிதராக இவர் வாழ்ந்திருந்தார்.

ஒரு காலத்தில் தனக்காக - தன் வாழ்வுக்காக ஒரு பெண் உயிலாக விட்டுச் சென்ற செல்வத்தை அது சிறிதாக இருந்தாலும் கூட, தேவை என்று தேடிச் சென்ற மனிதர், ஒரு நிலையில் மற்றவர்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து புனிதராக மாறிய வரலாற்றைக் காண்கிறோம். ஆவர் வாழும்போது நாட்டின் அரசியாரே அவரைக் கேட்டு ஆலோசித்து கருமங்களை முன்னெடுக்கும் உயர்வான ஒரு நிலையைக் கூட அவருக்கு இறைவன் வழங்கியிருந்ததை அவரது வாழ்வின் வரலாற்றிலே நாம் காண்கிறோம்.

வாழும்போதே தூயவளாகப் போற்றப்பட்ட அன்னை தெரேசா கூட தனக்காக வாழ்வதை விடவும் மற்றவர்களுக்காக வாழ்வதில்தான் மனிதத்தின் - மனித நேயத்தின் - தொடர்ச்சியான இருப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதை உணர்ந்தவளாக இறைவனின் அழைப்பிற்குச் செவி சாய்த்து பிறருக்காகத் தான் வாழ, தன்னை முழுமையாக விட்டுக் கொடுத்ததை உலகறியும். தன்னை மட்டும் நேசித்து அவள் வாழ்ந்தபோது அவளைத் தெரிந்திருந்தவர்களின் தொகை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்திருக்கும். மாறாக, பிறருக்காக வாழ அவள் முற்பட்ட பிறகு முழு உலகமுமே அவளைத் தெரிந்து வைத்திருந்தது.

நம் வாழ்;வு நம்மோடு இருக்கின்றவரை நம் விலாசம் நமது வீட்டின் விலாசம் என்ற மட்டில்தான் அமைந்து விடுகிறது. மற்றவர்களுக்காக நம் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளும்போது முழு உலகமே நமக்கான விலாசமாக, இருப்பாக மாறி விடுகின்றது.


ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்








 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7