மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் முன்பாக சிறிய ரக டிப்பர் வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (02) அதிகாலை 4.10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின் கம்பத்தில் மோதியுள்ளது.
இதில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த அயர்தீன் தாபீன்(27வயது) ரபீக் சியாம் (30 வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை களை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.