LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

தாயகச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

கனடா செய்திகள்

உலகச் செய்திகள்

கட்டுரைகள்

கலை இலக்கியம்

சினிமா செய்திகள்

Wednesday, February 4, 2026

கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில்78 ஆவது சுதந்திர தின நிகழ்வு அனுஸ்டிப்பு

(க.ஜெகதீஸ்வரன்)

இலங்கைத் திருநாட்டின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு கல்குடா வலயக்கல்வி வளாகத்தில் இன்று புதன் கிழமை (2026.02.04) காலை 9.00 மணிக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளரினால்; தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த உறவுகளுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கு சுதந்திர தினம் பற்றியும் டித்வா புயலின் தாக்கத்தினால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்த நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பாதையில் பங்குதாரர்களாக விளங்கவேண்டியதன் அவசியம் குறித்தும்; நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் கந்தசாமி ஹரிகரராஜ் அவர்களினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.இந்நிகழ்வில் பிரதிக் கல்விப்; பணிப்பாளர்களான திரு.T.இதயகுமார் , திரு.S.தயாளசீலன், திரு.N.நேசகஜேந்திரன், திரு.Y.C.சஜீவன், திரு.A.ஜெயக்குமணன் அவர்களும், கணக்காளர் திரு.வே.வேல்ராஜசேகரம், பதில் நிருவாக உத்தியோகத்தர் A.M.றியாழ்; உள்ளிட்ட வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியில் உத்தியோகத்தர்களுக்கு இனிப்புப் தின் பண்டங்களும் வழங்கப்பட்டது.
இறுதியாக யு.ஜெயக்குமணன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.














Monday, January 26, 2026

ஓய்வூதியத்தை எதிர்பார்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றமாம்

(கஜென்)

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடமாற்ற கட்டளை  தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (25) களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் அபுசாலி முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. 2005ஆம் ஆண்டு நியமனம் பெற்று 21 வருடங்களாக சேவையாற்றி ஒய்வு பெறப்போகும் தருவாயில் திருகோணமலைக்கு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குஇடமாற்றம் வழங்கப்பட்டது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்ச்சியுற்றுள்ளதாக மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களிடம் களுவாஞ்சிகுடியில் ஒன்றுசேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக கடந்த 21வருடமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் யுத்த காலத்தில் கடமையாற்றி தற்போது ஐம்பது வயதை கடந்த நிலையில் இவ்வாறு வழங்கப்பட்டஇடமாற்றம் தமக்கு உளவியல்இ உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

குறித்த விடயம் பிரதம செயலாளருடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சாதகமான பதில் கிடைக்காதபட்சத்தில் சட்ட ரீதியாக குறித்த இடமாற்றத்தை அணுகுவது தொடர்பில் பிரசித்தமான சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















Saturday, January 24, 2026

தேசிய கலை இலக்கிய விழாவில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை மாணவி சாதனை

                                                         (க.ஜெகதீஸ்வரன்)

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த “தேசிய இலக்கிய விருது வழங்கல் - 2024“ 2026 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி, சனிக்கிழமை (இன்று) மு.ப. 10.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய இல் உள்ள பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

 இலங்கையின் இலக்கியத்துறையில் கால்பதிக்கும் இளம் படைப்பாளிகளில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியவர்களை கௌரவிக்கும் இவ்விழாவில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கியப் போட்டித் தொடரில் அதி சிரேஷ்ட பிரிவில் பங்குபற்றி இலக்கிய விமர்சனம் போட்டியில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையின் மாணவி திரு.திருமதி. ஜெயரஞ்சித் - ஸோபா அவர்களின் இளைய மகளான  செல்வி.ஜெ.அத்விஹா அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

Saturday, March 15, 2025

கல்குடா கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் முத்தாரம் இசை, நடன நிகழ்வு

(க.ஜெகதீஸ்வரன்) கல்குடா வலயக்கல்வி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தாரம் இசை, நடன நிகழ்வு செங்கலடி மத்திய கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கல்வி அமைச்சின் இணைப்பாடவிதானம் மற்றும் ஆரம்பக்கல்வி அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், அழகியல் பிரிவிற்கான பணிப்பாளர் வருண அழகக்கோன் மற்றும் முன்னைநாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம், நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் நிருவாகத்திற்கான பிரதிக்கல்வி பணிப்பாளருமான திருமதி.எம்.ஏ.றிஸ்மியாபாணு, முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.தயாளசீலன், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன், கணக்காளர் வே.வேல்ராஜசேகரம், நடனத்திற்கான ஆசிரிய ஆலோசகர் திருமதி.சு.நிரஞ்சன், ஆசிரிய ஆலோசகர்கள், வலய உத்தியோகத்தர்கள், பெற்றார்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன்போது கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பல்வேறு இசை, நடன மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகளுக்கு கல்குடா வலயக் கல்வி அலுவலக நலன்புரிச் சங்கத்தினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
















கல்குடா கல்வி வலயத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

(க.ஜெகதீஸ்வரன்)

கல்குடா கல்வி வலயத்தின் இணையத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வலயத்தின்  மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் T. இதயகுமார் இணையத் தளத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

குறித்த இணையத்தளத்தில் கல்குடா கல்வி வலயத்தின் பாடசாலைகள் தொடர்பிலான விபரங்கள் மற்றும் அதிபர்கள்> ஆசிரியர்கள்> மாணவர்கள்  பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதுடன் வலயத்தின் கல்வி அடைவுகள் தொடர்பிலான தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இணையத் தளத்தைப் பார்வையிட  https://www.kalkudahzone.edu.lk/index.php கிளிக் செய்யவும்

 


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7