LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

தாயகச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

கனடா செய்திகள்

உலகச் செய்திகள்

கட்டுரைகள்

கலை இலக்கியம்

சினிமா செய்திகள்

Wednesday, April 10, 2024

கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் உத்தியோகத்தர்களின் அமோக வரவேற்புடன் புதிதாக கடமையேற்பு

                  

                      (ஷோபனா ஜெகதீஸ்வரன்)

கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் புதிதாக கடமையேற்;கும் நிகழ்வு இன்று (10) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் வலய உத்தியோகத்தர்களின் அமோக வரவேற்புடன்  சிறப்பாக நடைபெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் த. அனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கல்குடா வலயத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.சிவசங்கரி கங்கேஸ்வரன், கனகசுந்தரம்  ஜெயவதனன், சண்முகலிங்கம் தட்சணாமூர்த்தி ஆகியோருக்கு பதிலாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான நல்லதம்பி நேசகஜேந்திரன், சீவரெத்தினம் தயாளசீலன், தனபாலசிங்கம் இதயகுமார் ஆகியோர் சுபவேளையில் இன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடமையேற்பு நிகழ்வின் பின்னர் பிரதான நிகழ்வுகள் வலயத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் தனது தலைமையுரையில் வலய கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளினூடாக,  திட்டமிட்ட அடிப்படையில் வலயத்தின் கல்வி அபிவிருத்திக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர். இக் கைங்கரியத்தில் புதிதாக மூன்று பிரதிக்கல்விப் பணிப்பாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர். அவர்களை அன்போடும் கண்ணியத்தோடும் வரவேற்கின்றாம். எல்லோரும் இணைந்து தொடர்ச்சியாக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற போது நாம் கல்வி வெளியீடுகளை அதிகரிக்க முடியும் என்றார்.

பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் தமதுரையில் இன்றிலிருந்து நாமும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவோம். அதனூடாக கல்குடா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டனர்.

நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. முஹமட் ஆபூபக்கர் றிஸ்மியா பாணு மற்றும் கோறளைப்பற்று கோட்டத்திற்கான கோட்டக்கல்விப்பணிப்பாளர் அற்புதராஜா ஜெயக்குமணன் ஆகியோர் வலயத்தின் கடந்தகால செயற்பாடுகளை நினைவுபடுத்தி உரை நிகழ்த்தினர்.

குறித்த நிகழ்வில் நிதி உதவியாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன்  மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

 

 


 
  

 





Monday, December 11, 2023

கல்குடா கல்வி வலயத்தில் மொழித்திறன் மற்றும் 100 சதுர கணித்தல் போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்

(ஷோபனா ஜெகதீஸ்வரன்)


கல்குடா கல்வி வலயத்தின் மொழித்திறன் மற்றும் 100 சதுர கணித்தல் போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (11) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வலயத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்பபிரிவிற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் க.யோகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சிவசங்கரி கங்கேஸ்வரன், அபிவிருத்திக்கான  பிரதிக்கல்விப் பணிப்பாளர் முஹம்மது அபூபக்கர் றிஸ்மியா பாணு, கணக்காளர் வி.கணேசமூர்த்தி,  நிதி உதவியாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன்,   மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான, திருமதி.ஈ.வீ.கனகரெட்ணம், தனலக்சுமி தருமராஜா, திருமதி.சௌ.அருளேந்திரன் திருமதி.கே.ரவீந்திரகுமார், ஏ.சந்திரகாந்தன்,  திருமதி.கே.கமலநாதன்,  அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

03 கோட்டங்களிலும் மொழித்திறன் மற்றும் 100 சதுர கணித்தல் போட்டி நிகழ்வுகளில் சிறந்த சாதனைகளை நிகழ்த்திய மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 






















Thursday, November 9, 2023

கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 19 அதிபர்களுக்கும் மகத்தான வரவேற்பு

 (ஷோபனா ஜெகதீஸ்வரன்)

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இலங்கை அதிபர் சேவைக்காக கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 19 அதிபர்களுக்கான வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்வு நேற்று 08.11.2023ஆம் திகதி புதன்கிழமை காலை நடைபெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான சிவசங்கரி கங்கேஸ்வரன், க.ஜெயவதனன், எஸ். தட்சணமூர்த்தி, கணக்காளர் வி.கணேசமூர்த்தி, நிருவாக உத்தியோகத்தர், எச்.எம்.எம்.பாறுக், நிதி உதவியாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன், பதவிநிலை உத்தியோகத்தர் ஐ.எல்.அஸ்ரப் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வரவேற்பு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் கல்குடா வலயக்கல்வி அலுவலக பிரதான வாயிலில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு பிரதான  நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன் தனது தலைமையுரையில் 'பரீட்சையை வைத்து தீர்மானித்தாலும் சரி, நேர்முகப் பரீட்சையை வைத்து தீர்மானித்தாலும் சரி புதிய பதவிகள் வருவதென்பது அது இயற்கையாகத் தீர்மானிக்கப்பட்டது. உண்மையாக உங்களுக்குப் பொருத்தமானது, அதற்கு நீங்கள் பொருத்தமானவர்கள், தகுதியானவர்கள் என்ற வகையிலேயே அமையும்' எனக் குறிப்பிட்டார்.

 தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் வந்திருக்கிற தொழிலை சம்பளத்துடன் தொடர்புபடுத்தி யோசிக்கிறோமே தவிர குறித்த தொழிலின் அந்தஸ்து, தொழிலின் ஊடாக சமூகத்திற்கு செய்யப் போகின்ற கைங்கரியங்கள் தொடர்பில் சிந்திப்பது குறைவு எனக் குறிப்பிட்டதுடன் நீங்கள் அவ்வாறானவர்கள்  அல்ல. கஸ்டப்பிரதேசங்களில் கல்விக்காக அரும்பாடு பட்டவர்கள். நீங்கள் அனைவரும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உச்சமாக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்கள் தமது அனுபங்களை பகிர்ந்து கொண்டதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தமது பூரண பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்கவுள்ளதாகவும்; குறிப்பிட்டனர். 



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7